Latestமலேசியா

ஊழல் தடுப்பு ஆணையத்தை நாடாளுமன்றத்தின் கீழ் வைப்பதா? சாதகப் பாதக அம்சங்கள் ஆராயப்படும் என்கிறார் பிரதமர்

புக்கிட் மெர்தாஜாம், ஜூன்-18, MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை நாடாளுமன்றத்தின் கீழ் வைக்கக் கோரும் பரிந்துரை ஆராயப்படும்.

அதனால் ஏற்படப் போகும் சாதகப் பாதக அம்சங்களை அரசாங்கம் நன்கு ஆராய வேண்டியிருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அரசியல்வாதிகள் சிலரும் MACC-யின் பார்வையில் சிக்கியிருப்பதால், அப்பரிந்துரையை ஆழமாக ஆராய வேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.

நடப்பில், நாடாளுமன்றத்தின் கீழ் MACC வரவில்லை என்றாலும், அதிகார முறைகேட்டில் ஈடுபடுவோரை விசாரித்து நீதிமன்றத்தில் நிறுத்ததும் கடப்பாட்டை அவ்வாணையம் கொண்டிருக்கின்றது.

கடமைத் தவறாமல் அது தன் பணியைச் செவ்வனே செய்து வருவதாக பிரதமர் கூறினார்.

MACC-யை நாடாளுமன்றத்தில் கீழ் வைக்கும் பரிந்துரையில் தமக்கு உடன்பாடு இல்லை என அதன் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி (Tan Sri Azam Baki) முன்னதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!