ஷா அலாம், நவ 26 – சிலாங்கூரில் டி. ஏ. பி-யைச் சேர்ந்த நகரான்மைக் கழக உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் கிராம தலைவர்கள் இணைந்து பணியாற்ற முடியாவிட்டால் அவர்கள் பதவி விலகலாம் என டி.ஏ.பி-யின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் வலியுறுத்தினார்.
சிலாங்கூரில் ஊராட்சி மன்ற அமைப்பில் பல்வேறு பதவிகளில் உள்ளவர்களிடையே போதுமான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாததை தாம் அறிந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
உங்களால் ஒத்துழைக்க முடியாவிட்டால் உடனடியாக விலகிவிடுங்கள். அவர்கள் விலகாவிட்டால் அவர்களை நாங்கள் நீக்க வேண்டியிருக்கும் என சிலாங்கூர் டி.ஏ.பி மாநாட்டில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மிகவும் கடுமையாக நடந்துகொள்ளும்படி மேடையில் இருந்த சிலாங்கூர் டி.ஏ.பி-யின் தலைவர் கோபிந் சிங் டியோவையும் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டார்.