Latestமலேசியா

ஒற்றுமையை உறுதிப்படுத்த ம.இ.காவின் தலைவர் துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு பெற தீர்மானம் நிறைவேற்றம் – ரவின் குமார்

ஜொகூர் பாரு, டிச 12 – கட்சியை வலுப்படுத்தவும் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் அடுத்த ஆண்டு ம.இ.கா தேசிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு போட்டியிருக்கக்கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவர் கே. ரவின் குமார் தெரிவித்தார்.

ம.இ.காவிற்குள் அணி அரசியல் உருவாகுவதை தடுக்கும் நோக்கத்தில் கட்சி தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முடிவு காணப்பட்டதாக அவர் கூறினார் .

ம.இ.காவுக்கு தொடர்ந்து தலைமையேற்பதற்கு கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் நம்பிக்கையை தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ சரவணனும் பெற்றுள்ளதாக ஜொகூர் ஆட்சிக் குழு உறுப்பினருமான ரவின் குமார் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!