Latestமலேசியா

ஒலிம்பிக் போட்டியில் மலேசிய குழுவின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்வீர், ஒட்டு மொத்த மலேசியர்களுக்கு பிரதமர் அன்வார் அறைகூவல்

கோலாலம்பூர், ஜூலை 25 –  2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தேசிய விளையாட்டுக் குழுவினரின் வெற்றிக்காக ஒட்டு மொத்த மலேசியர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டுமென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். நாளை ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11ஆம் தேதி வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் சிறந்த அடைவு நிலையை வெளிப்படுத்தி மலேசிய விளையாட்டாளர்கள் வரலாற்றை படைப்பார்கள் என தனது முகநூலில் பதிவேற்றம் செய்த காணொளியில் அவர் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிக்கான மலேசிய குழுவினர் முழுமையாக தங்களை பயன்படுத்திக்கொண்டு பாரிஸ் சென்றுள்ளதோடு இப்போது களத்திற்கு தயாராகிவிட்டனர். அவர்கள் அனைவரும் சிறந்த வெற்றியை பெற்று பதக்கங்களை பெறுவதற்கு நமது மலேசிய மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என அன்வார் கேட்டுக்கொண்டார். மலேசியக் குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து விளையாட்டாளர்களும் வெற்றி பெறுவதற்கும் நமது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம் என அவர் வலியுறுத்தினார். நாட்டிற்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வாகைசூட வேண்டும் என்ற இலக்கோடு மலேசிய குழுவைச் சேர்ந்த 26 விளையாட்டாளர்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!