Latestஉலகம்

ஓமாக் நகரை சூழ்ந்துள்ள மர்ம சத்தம் ; ஒலி நிபுணர்களை அழைக்க அயர்லாந்து அரசாங்கம் முடிவு

ஓமாக், நவம்பர் 24 – அயர்லாந்து, ஓமாக் நகரை சூழ்ந்துள்ள மர்ம சத்தத்தால், அங்குள்ள மக்கள் தூக்கத்தை தொலைத்து தவிக்கின்றனர்.

அண்மைய சில வாரமாக, டைரோன் நகர் பகுதியில் இரவு நேரங்களில் அந்த இரைச்சல் பதிவாகி வருவதாக கூறப்படுகிறது.

எனினும், அது என்ன சத்தம்? எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சிகள் எதுவும் இதுவரை பயனளிக்கவில்லை.

கடந்த அக்டோபர் பிற்பகுதியில், ஓமாக்கின், தம்லாக்ட் சாலையில் முதல் முறையாக அடையாளம் காணப்பட்ட அந்த மர்ம சத்தம் சில வாரங்களில், அந்நகரின் இதர பகுதிகளுக்கும் பரவியது.

அதனால், அந்த மர்ம சத்தத்தின் மூலத்தை கண்டுபிடிக்க, ஒலி நிபுணர்கள் வரவழைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!