Latestமலேசியா

கடன் தர மறுத்த நண்பரை கத்தியால் தாக்கிய ஆடவர் கைது

கோலாலம்பூர், நவ 7 – கடன் தர மறுத்தவரை மோதியதோடு பாராங் கத்தியால் தாக்கி காயம் ஏற்படுத்திய ஆடவரை போலீசார் கைது செய்தனர். அந்த சந்தேகப் பேர்வழி மதுபோதையில் இருந்ததோடு வெட்டுக் கத்தியால் அவரை தாக்கியுள்ளார். போர்ட்டிக்கசன் , புக்கிட் பிளான்டோக் நகரிலுள்ள ஒரு கிளினிக்கிற்கு முன் இச்சம்பவம் நிகழ்ந்ததாக போர்ட்டிக்சன் போலீஸ் தலைவர் ஐடி ஷாம் முகமட் தெரிவித்தார். கத்திக் குத்துக்கு உள்ளான 33 வயது நபரை பொதுமக்கள் கண்டு போலீசிற்கு தகவல் கொடுத்ததாக அவர் கூறினார். விடியற்காலை மணி 1.50 அளவில் தாமான் முர்னியிலுள்ள ஒரு வீட்டில் சந்தேகப் பேர்வழியை போர்ட்டிக்சன் குற்றப் புலனாய்வுத்துறையின் அதிகாரிகள் கைது செய்தனர். அந்த சந்தேகப் பேர்வழி இதற்கு முன் 12 குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டுள்ளார் என்றும் தெரியவந்திருப்பதாக ஐடி ஷாம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!