Latestமலேசியா

கட்டுமான பகுதியில் குளத்தில் மூழ்கி சிறுமி உட்பட 3 சிறார்கள் மூழ்கி மரணம்

கூடாட் . டிச 8 – சபா கூடாட்டில் கம்பூங் பெர்பாடுவான் ரியாவில் கட்டுமான பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற ஒரு சிறுமியும் மேலும் இரண்டு சிறுவர்களும் மூழ்கி இறந்தனர்.

நேற்று மதியம் ஒரு மணியளவில் நிகழ்ந்த அந்த துயரச் சம்பவத்தில் 11 வயதுடைய வான் ஹர்மி, 7 வயதுடைய முகமது சியாவான் ஆகிய சிறுவர்களுடன் நூருல் இசா என்ற 11 வயது சிறுமியும் உயிரிழந்தார்.

கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட அந்த குளத்தில் அந்த மூவரும் மூழ்கி மாண்டதாக கூடாட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் இஷாக் ஜபாஸ் தெரிவித்தார்.

தகவல் அறிந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சென்றடைவதற்குள் பொதுமக்களின் உதவியோடு அந்த சிறார்கள் குளத்திலிருந்து மீட்கப்பட்டனர்.

சுயநினைவு இல்லாமல் இருந்த அந்த சிறார்களுக்கு சுவாசிப்பதற்கான முதலுதவி வழங்கப்பட்ட பின்னர் உடனடியாக கூடாட் மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லலப்பட்டனர்.

எனினும், அவர்கள் மரணம் அடைந்துவிட்டதை கூடாட் மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக இஷாக் ஜபாஸ் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!