![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-13-May-2024-04-14-PM-6566.jpg)
ஈப்போ, மே 13 – Kampar , Pearl Park ,Jalan Kuala Dipang கில் கார் மீது மரம் விழுந்ததில் பெண்மணி ஒருவர் உயிர்தப்பினார். இன்று காலை மணி 6.55 அளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு பேரா தீயணைப்பு மீட்பு குழுவினர் அங்கு சென்றதாக அதன் பொறுப்பதிகாரி Faieszaruddin Mohd Yusop தெரிவித்தார். காரில் சிக்கிக் கொண்ட 30 வயதுடைய அந்த பெண்ணை மீட்பதற்கு முன் இயந்திர ரம்பத்தை பயன்படுத்தி கார் மீது விழுந்த கிடந்த மரம் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். கடந்த சில நாட்களாக நாட்டின் நகர்ப்புற பகுதியிகளில் கடுமையான மழையின்போது மரங்கள் விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.