கோலாலம்பூர், மார்ச் 6 – கல்வி அமைச்சின் கீழுள்ள, அனைத்து கல்விக்கூடங்களிலும் பாலர் பள்ளிகள் அமைக்கப்படவுள்ளன.
தொழிற்பயிற்சி கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கழகங்கள் ஆகியவையும் அதில் அடங்கும்.
2024/2025-ஆம் ஆண்டுக்கான கல்வித் தவணையில் அத்திட்டம் செயல்படுத்தப்படுமென, கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்தார்.
மாணவர்கள் ஆரம்பத்திலேயே கல்வியிலிருந்து விடுபட்டு போய்விடாமல் இருப்பதை உறுதிச் செய்ய, இலவசமாக அறிமுகம் காணவுள்ள அத்திட்டத்தை பெற்றோர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் பட்லினா கேட்டுக் கொண்டார்.
அதே சமயம், இவ்வாண்டு நாட்டில் கூடுதலாக 129 பாலர் பள்ளிகள் அமைக்கப்படவுள்ள நிலையில், அதன் வாயிலாக நாட்டிலுள்ள மொத்த பாலர் பள்ளிகளின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 909-ஆக அதிகரிக்கும் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.