காஜாங், ஏப்ரல் 20 – சிலாங்கூர் காஜாங்கில் சிறார் கும்பலொன்று நடத்திய கேலிவதைத் தாக்குதில் 8 வயது சிறுமி காயமடைந்தாள்.
அச்சிறுமியின் பராமரிப்பாளர் போலீசில் புகார் செய்ததை அடுத்து, அந்த ‘அடாவடி’ சிறுவர்களின் குட்டு அம்பலமானது.
4-கில் இருந்து 5 பேர் வரை இருக்கலாம் என நம்படும் அச்சிறார்கள் அக்கம்பக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்களாக 6 முதல் 8 வயது வரையிலான சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டு, 2001 சிறார் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என காஜாங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் Superintendan Muhamad Nasir Drahman தெரிவித்தார்.
சிறுவர் கும்பலொன்று 8 வயது சிறுமியை கேலிவதை செய்து, முகத்தில் குத்தி, காலில் அறுவைச் சிகிச்சை செய்யும் அளவுக்கு அடித்துக் காயப்படுத்தியதாக X தள பயனர் ஒருவர் முன்னதாக தகவல் பதிவிட்டிருந்தார்.
வாயில் selotaip ஒட்டப்பட்டு, காலில் கல்லால் தாக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு, வயிற்றில் குத்தப்பட்டு சித்ரவதைக்கு அவள் ஆளானதாக அந்நபர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், சம்பந்தப்பட்ட சிறுமியின் தாயை தமது அதிகாரிகள் தொடர்புக் கொண்டிருப்பதாக மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர்
Datuk Seri Nancy Shukri கூறினார்.