Latestமலேசியா

Lift-டினுள் மாற்றுத்திறனாளி ஆடவர் மீது சுடுநீர் வீச்சு; பெண் கைதாகிறார்

பாயான் லெப்பாஸ், ஏப்ரல் 20 – பினாங்கு பாயான் லெப்பாசில் அண்டை வீட்டுக்காரப் பெண் கொதிக்கக் கொதிக்க சுடுநீரைக் கொட்டியதில், மாற்றுத்திறனாளி ஆடவரின் உடல் வெந்துப் போனது.

Jalan Rajawali I-Park அடுக்குமாடிக் குடியிருப்பின் Lift- டினுள் நேற்று அச்சம்பவம் நிகழ்ந்தது.

16-வது மாடியில் இருக்கும் தனது வீட்டுக்குப் போவதற்காக அவ்வாடவர் Lift-னுள் நுழைந்திருக்கிறார்.

அப்போது அங்கிருந்த மாது, பையில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்து அதிலிருந்த கொதிநீரை திடீரென அவ்வாடவர் மீது கொட்டினார்.

சூடு தாங்காமால அலறி, அவர் கையெடுத்துக் கும்பிடுவதும், ஆனால் எதுவுமே நடக்காதது போல் அப்பெண் சர்வ சாதாரணமாக நின்றுக் கொண்டிருப்பதும் வைரலான 21 வினாடி காணொலியில் தெரிகிறது.

அவ்விருவரும் இதுவரை பேசிக் கொண்டது கூட இல்லை என்பதால் அந்த சுடுநீர் வீச்சு தாக்குதலுக்கான காரணத்தை இப்போது உறுதிப்படுத்த இயலாது என Barat Daya மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் Jafri Md Zain கூறினார்.

அம்மாது அடையாளம் காணப்பட்டு விட்டார்; ஆனால் இன்னும் கைதுச் செய்யப்படவில்லை என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட 33 வயது நபர் down syndrome பாதிப்புக்கு ஆளானவர் என்றாலும் அவரால் நன்றாக பேச முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

உடலின் முன்பகுதியிலும் வலப்புறப் பின்பகுதியிலும் தோல் வெந்து போய் அவர் தற்போது பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அவரின் உடல்நிலையும் சீராக இருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!