Latestமலேசியா

காஜாங்கில், துரித உணவகத்தில் இஸ்ரேலிய கொடியை பறக்க விட்ட ஆடவனுக்கு ; RM100 அபராதம்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 6 – சிலாங்கூர், காஜாங்கிலுள்ள, துரித உணவகம் ஒன்றில், இஸ்ரேலிய கொடியை பறக்க விட்ட ஆடவனுக்கு, காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று நூறு ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

25 வயது தாரிக் ஹசிம் முஹமட் யுஸ்ரி எனும் அவ்வாடவன், தமக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அந்த அபராதம் விதிக்கப்பட்டது.

எனினும், அபராதத்தை செலுத்த தவறினால், அவன் ஒரு நாள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமென மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

மே 29-ஆம் தேதி, மாலை மணி 4.42 வாக்கில், ஜாலான் உலு லாங்காட்டிலுள்ள, துரித உணவகம் ஒன்றில் அவன் அக்குற்றத்தை புரிந்துள்ளான்.

பாலஸ்தீன போரில், தனது உறவினர்கள் சிலர் கொல்லப்பட்டதால், சினமடைந்த அவ்வாடவன் அவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!