Latestமலேசியா

காணாமல்போன் முன்னாள் ராணுவ வீரரின் உடல் மீட்பு

குளுவாங், அக் 18 – நான்கு நாட்களுக்கு முன் குளுவாங்கில் காணாமல்போன ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் அப்துல் மனன் கெரியின் உடல் செம்பனை தோட்டத்தில் மீட்கப்பட்டது.

73 வயதுடைய அப்துல் மனனின் உடல் சுங்கை மேலந்தையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் மீட்கப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் பஹ்ரின் நோ தெரிவித்தார்.

அந்த தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் அப்துல் மனனின் சடலத்தைக் கண்டு தகவல் கொடுத்ததாக அவர் கூறினார்.

அவரது உடலை மீட்புக் குழுவினர் மீட்டனர். டாத்தாரான் தாசிகில் நடைபெற்ற தேநீர் விருந்துக்கு சென்றுவிட்டு திரும்பியபோது அவர் தடுக்கி கால்வாயில் விழுந்ததாக இதற்கு முன் தகவல் வெளியானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!