Latestமலேசியா

காராக் நெடுஞ்சாலையில் சம்பவம்; பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை ஏற்றியிருந்த லாரி கவிழ்ந்து, எண்ணெய் கொட்டியது

கோம்பாக், மே-14, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை ஏற்றியிருந்த லாரி, காராக் நெடுஞ்சாலையின் 36.8-வது கிலோ மீட்டரில் கவிழ்ந்ததில், சாலையில் எண்ணெய் கொட்டியது.

நேற்று பிற்பகல் 2 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில், குவாந்தானில் இருந்து கிள்ளான் துறைமுகம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த Volvo ரக லாரி, கடும் மழையில் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியது.

இதனால் சாலையில் எண்ணெய் கொட்டிய வேளை, 50 வயது லாரி ஓட்டுநர் சாலையோரத்தில் விழுந்தார்.

அச்சம்பவம் குறித்து நேற்றிரவு 9 மணி வாக்கில் தகவல் கிடைத்ததாகக் கூறிய கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Noor Ariffin Mohamad Nasir, லாரி ஓட்டுநருக்கு காயமேதும் ஏற்படவில்லை என்றார்.

அச்சம்பவம் 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

அசம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் போலீசைத் தொடர்புக் கொண்டு உதவிடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!