கோலாலம்பூர். நவ 25 -கிளந்தான், திரெங்கானு மற்றும் பஹாங்கில் இம்மாதம் 25 ஆம் தேதிவரை தொடர்ந்து மழை பெய்யும் என மலேசிய வானிலைத்துறை தெரிவித்திருக்கிறது. தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பச்சோக், மச்சாங், பாசிர் புதே , குவாலா க்ரை, ஆகிய இடங்களிலும் பஹாங்கில் குவாந்தானிலும் கடும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது. அதோடு பெர்லீஸ் ,கெடா பினாங்கு மற்றும் பேராவிலும் தொடர்ச்சியாக மழைபெய்யும் என்பதோடு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம் என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.