Latestமலேசியா

கிளினிக் பணியாளரைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய மருத்துவர் கைது

ஜெம்போல், மார்ச் 3 – நெகிரி செம்பிலான் ஜெம்போலில், தனியார் கிளினிப் பணியாளரானப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

36 வயது அம்மருத்துவர் விசாரணைகளுக்காக 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன் ஹூ ச்சாங் கூறினார்.

26 வயது அப்பெண் பிப்ரவரி 28-ஆம் தேதி செய்த போலீஸ் புகாரை அடுத்து மருத்துவர் கைதானார்.

அப்பெண் அங்கு வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதமே ஆகியுள்ளது; வேலை நேரம் முடிந்து, ஓய்வெடுக்கும் அறையில் அம்மருத்துவர் அவரிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதமே ஆனாலும், இது நடப்பது முதன் முறையல்ல; ஏற்கனவே இரண்டு தடவை அவ்வாடவர் தம்மைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அப்புகாரில் அவர் கூறியுள்ளார்.

மீண்டும் மீண்டும் தாம் அத்தொல்லைக்கு ஆளானதால், பொறுமையிழந்து அதனை வீட்டில் தெரிவித்து, காவல் துறையில் அப்பெண் புகார் செய்திருக்கிறார்.

குற்றவியல் சட்டத்தின் 354-வது பிரிவின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.

விசாரணை அறிக்கை முழுமைப் பெற்றதும், மேல் நடவடிக்கைக்காக அது அரசு தரப்பு துணைத் தலைமை வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் என ஹூ ச்சாங் மேலும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!