Latestமலேசியா

குழந்தைகள் காப்பகத்தில் ஆட்டிசம் குறைபாடு கொண்ட சிறுவனுக்கு அடி உதை; ஆசிரியர் கைது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை-19, ஆட்டிசம் குறைபாடு கொண்ட 6 வயது சிறுவனை அடித்து எட்டி உதைத்த சந்தேகத்தின் பேரில், குழந்தைகள் காப்பகத்தைச் சேர்ந்த ஆசிரியர் கைதாகியுள்ளார்.

அச்சிறுவனின் தந்தை புதன்கிழமை கொடுத்த புகாரின் அடிப்படையில் அம்பாங்கில் உள்ள வீட்டில் வைத்து 32 வயது அந்நபர் கைதுச் செய்யப்பட்டார்.

சரமாரியாக அடித்து உதைத்ததோடு மட்டுமல்லாமல், நாற்காலியிலிருந்து விழும் அளவுக்கு அவனை ஆசிரியர் தரதரவென இழுத்ததும் தொடக்கக் கட்ட விசாரணையில் அம்பலமானது.

கையில் கடிக்கப்பட்ட தளும்பும் கண்டறியப்பட்டது.

அச்சம்பவத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய விசாரணைத் தொடர்ந்து நடைபெறுவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல் நிசாம் ஜாஃபார் (Shahrul Nizam Jaa’far) கூறினார்.

2001 சிறார் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!