Latestமலேசியா

குவாலா சிலாங்கூரில் 2 சிறுமிகளைக் கடத்திய சந்தேக நபர் கைது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை-22, குவாலா சிலாங்கூர், ஜெராமில் வெள்ளிக்கிழமையன்று 2 சிறுமிகளைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவன் நேற்று காலைக் கைதுச் செய்யப்பட்டான்.

ஜெராமில் உள்ள வீட்டொன்றில் வைத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மணி 2.40-க்கு அவன் கைதானதை குலாலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் இடைக்காலத் தலைவர் மொஹமட் நோர்டின் அம்பியா (Mohd Ambia Nordin) உறுதிபடுத்தினார்.

கைதான போது, அந்நபர் முரண்டுப் பிடிக்காமல் முழு ஒத்துழைப்புக் கொடுத்தான்.

சந்தேக நபர் ஏற்கனவே ஒரு குற்றப்பதிவைக் கொண்டிருப்பதும் உறுதிச் செய்யப்பட்டது.

இதையடுத்து, குற்றவியல் சட்டத்தின் கீழும் 2001 சிறார் சட்டத்தின் கீழும் விசாரிக்கப்பட ஏதுவாக ஜூலை 25-ஆம் தேதி வரை அவ்வாடவன் தடுத்து வைக்கப்பட்டான்.

அக்கடத்தல் சம்பவம் இன்னமும் விசாரணையில் உள்ளது; கடத்தலுக்கானக் காரணம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாக மொஹமட் நோர்டின் மேலும் சொன்னார்.

வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் Taman Ikan Emas-சில் பெரோடுவா பேசா (Perodua Bezza) காரில் வந்த மர்ம நபரால் 6 மற்றும் 8 வயது சிறுமிகள் கடத்திச் செல்லப்பட்டனர்.

இருவரும் பின்னர் இரவு 7.45 மணி வாக்கில் Taman Kelisa-வில் தங்களின் வீட்டருகே பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!