குவாலா திரங்கானு, மார்ச் 29 – திரங்கானு, குவாலா நெருஸ், கம்போங் தெலகா பாட்டினில், சுற்றித் திரிந்த கரடி ஒன்றை, PERHILITAN – மாநில தேசிய பூங்கா வனவிலங்கு பாதுகாப்பு துறை பிடித்தது.
முன்னதாக, அந்த 65 கிலோகிராம் எடை கொண்ட பெண் கரடி, அங்குள்ள கோல்ப் மைதானத்திற்கு அருகில் சுற்றித் திரிவது குறித்து புகார் கிடைத்ததாக, மாநில பெர்ஹிலிதான் இயக்குனர் லூ கீன் சியோங் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்கிழமை அது குறித்து முதல் புகார் செய்யப்பட்ட வேளை ; தமது அதிகாரிகள் உடனடியாக அந்த கரடியை அடையாளம் காணும் நடவடிக்கைகளை தொடங்கியதாக லு சொன்னார்.
புதன்கிழமை, அந்த கரடியை பிடிக்க பொறி பொருத்தப்பட்டதை தொடர்ந்து, நேற்று காலை மணி 7.15 அது பிடிபட்டது.
அந்த ஐந்து வயது கரடி, ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடப்படும்.