Latestமலேசியா

கெடாவில், போலீசாரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்திய வேலை இல்லா ஆடவன் ; RM2,800 அபராதம் விதிக்கப்பட்டது

சுங்கை பெட்டாணி, டிசம்பர் 14 – பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு இடையூறை ஏற்படுத்திய, வேலை இல்லா ஆடவனுக்கு, சுங்கை பெட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஈராயிரத்து 800 ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

25 வயது முகமது ஜாஹிர் அப்துல்லா எனும் அவ்வாடவன், தமக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, மாஜிஸ்திரேட் கலையரசி முனியாண்டி அந்த அபராதத்தை விதித்தார்.

இம்மாதம் ஒன்பதாம் தேதி, பிற்பகல் மணி 1.30 வாக்கில், பாகார் அராங்க் தொழிற்சாலை பகுதியில், அவ்வாடவன் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதே சமயம், போதைப் பொருள் உட்கொண்ட குற்றச்சாட்டையும் அவன் ஒப்புக் கொண்டுள்ளான்.

இரசாயனத் துறை அறிக்கைகாக காத்திருப்பதால், அவ்வழக்கு விசாரணை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!