பெட்டாலிங் ஜெயா, மார்ச் 29 – KL – காராக் நெடுஞ்சாலையில், கிழக்குகரை மாநிலங்களை நோக்கி செல்லும் பாதையில், சுற்றுலா பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்தனர்.
14 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இன்று காலை மணி 7.50 வாக்கில், புக்கிட் திங்கியிலிருந்து, பஹாங், லெண்டாங் செல்லும் வழியில் அவ்விபத்து நிகழ்ந்தது.
சம்பவத்தின் போது அந்த பேருந்தில் 16 அந்நிய சுற்றுப் பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
எனினும், அவர்களின் மேல் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
காயமடைந்தவர்கள் பெந்தோங் மருத்துவமனக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னதாக, அவ்விபத்தால், அனைத்து வழிப்பாதைகளும் தடைப்பட்டதால் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக, LLM – மலேசிய நெடுஞ்சாலை வாரியம், தனது X சமூக ஊடகம் வாயிலாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.