
கோலா லங்காட் மே 16 – லபோஹான் டாகாங் (Labohan Dagang) நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதையடுத்து, கோலா லங்காட்டில் உள்ள 57 பகுதிகள், தண்ணீர் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இப்பிரச்னையைத் தொடர்ந்து, பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருவதாக சிலாங்கூர் நீர் மேலாண்மை (Pengurusan Air Selangor Sdn Bhd) தெரிவித்துள்ளது.
இந்த 57 பகுதிகளில் ஜுக்ரா, மோரிப், புலாவ் கேரி போன்ற முக்கிய பகுதிகளும் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இச்சிக்கலினால் தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, இதற்கு நிரந்தர தீர்வை எதிர்பார்ப்பதாக பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் கருத்துரைத்துள்ளனர்.