![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/07/MixCollage-02-Jul-2024-04-30-PM-6818.jpg)
செப்பாங், ஜூலை 2 – தப்ப முயன்ற சந்தேக நபர் ஒருவனை, போலீசார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை துரத்திச் சென்று சைபர்ஜெயாவில் கைதுச் செய்தது.
நேற்றிரவு மணி 9.30 வாக்கில், ஜாலான் சைபர்ஜெயா- டெங்கில் சாலையில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக, செப்பாங் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் வான் கமருல் அஜ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகிக்கும் வகையில் பயணித்த வெள்ளை நிற புரோடுவா பெஸ்ஸா ரக கார் ஒன்றை நிறுத்துமாறு பணித்தனர்.
எனினும், அக்கார் ஓட்டுனர் காரை நிறுத்தாமல், வேகமெடுத்ததால், சைபர்செளத் (Cybersouth)பகுதியில் அக்கார் விபத்துக்குள்ளானது.
அதனை தொடர்ந்து, மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு அக்காரை துரத்திச் சென்ற போலீசார், கார் ஓட்டுனரான 29 வயது ஆடவனை வளைத்துப் பிடித்தனர்.
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவ்வாடவன் போதைப் பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்துள்ள வேளை ; அவனுக்கு எதிராக பழைய குற்றப்பதிவுகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதங்கள் வரையிலான சிறை அல்லது ஈராயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.