Latestஉலகம்

சன் பிரான்சிஸ்கோ ஏபெக் கூட்டத்தில் வியட்னாம், பெரு அதிபர்களுடன் அன்வார் பேச்சு நடத்தினார்

சன் பிரான்சிஸ்கோ, நவ 17 – சன் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் ஏபெக் உச்சநிலை கூட்டத்தில் பங்கேற்றுவரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வியட்னாம் அதிபர் வோ வான் துவாங் மற்றும் பெரு அதிபர் டினா எர்சிலியா போலுயார்டே ஜெகர்ராவுடன் பேச்சு நடத்தினார். வியட்னாம் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து அதிபர் வோ வான் துவாங் கை அன்வார் சந்தித்தார். உலகளாவிய நிலையில் ஆசியானில் மலேசியாவின் 12 ஆவது மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்திற்கு அடுத்த நிலையில் வியட்னாம் திகழ்கிறது. இதுதவிர சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்திற்கு அடுத்து ஆசியானில் மலேசியாவின் நான்காவது மிகப்பெரிய முதலீட்டாளராகவும் வியட்னாம் திகழ்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!