தெனோம், மார்ச் 2 – சபாவில் ஜாலான் டெனோம் – கெனிங்காவ் சாலையில் போலீசார் மேற்கொண்ட ஒருங்கிணைந்த சாலை தடுப்பு நடவடிக்கையின்போது
102 .7 கிலோ கெத்தும் இலைகள் வைத்திருந்த ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.
41 வயதுடைய அந்த நபரின் காரிலிருந்து ஷாபு போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெனோம் மாவட்ட போலீஸ் தலைவர் துணைத் தலைவர் துணை கண்காணிப்பாளர் ஹசன் மஜித் தெரிவித்தார்.
மேலும் எட்டு மூட்டைகளில் இருந்த கெத்தும் இலைகள் அக்காரிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டதால் அபாயரமாக போதைப் பொருள் சட்டத்தின் கீழ் அந்த நபருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டுவருவதாக ஹசன் மஜித் தெரிவித்தார்.