நீலாய், மார்ச் 4 – சமூக ஊடகங்களை பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கென கல்வி அமைச்சு சிறப்பு வழிகாட்டியை கொண்டுள்ளது.
குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அது தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிச் செய்ய, தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கல்வி அமைச்சர் பட்லினா சிடெக் தெரிவித்தார்.
எனவே, ஆசிரியர்கள் தன்னிச்சையாக சமூக ஊடகங்களை துஷ்பிரயோகம் அல்லது தவறான நோக்கத்திற்காக பயன்படுத்த முடியாது.
கல்வி அமைச்சின் வழிகாட்டியை மீறியது கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் எச்சரித்தார்.