செதியூ, மார்ச் 16 – நேற்றிரவு மெராங் செதியூவில், யானையை மோதியதில் வாகனம் ஒன்றின் முன்பகுதி மோசமாக சேதமடைந்தத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கார் மோதியதில் சாலையோரத்தில் அந்த யானை, படுத்திருக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு 10:15 மணிக்கு கிடைத்த தகவலின் படி, செதியூ மாவட்ட காவல்துறை தலைமை துணை சுப்ரிடெண்டன் அஃபாண்டி ஹூசின் சம்பவம் இடத்திற்கு சென்றுள்ளார்.
வாகனத்தை ஒட்டிய அந்த 42 வயது ஆடவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லையாம். மாறாக, தாக்கப்பட்ட அந்த யானையின் காலில்தான் காயம் ஏற்பட்டு சாலையில் விழுந்துள்ளது என விளக்கினார்.
இருப்பினும், விபத்து நடந்த சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு அந்த யானை எழுந்து, மீண்டும் அருகில் உள்ள காட்டுக்குள் தப்பிச் சென்றது என தெரியவந்துள்ளது.