கோலாலம்பூர், ஏப்ரல் 12 – நோன்புப் பெருநாளின் முதல் நாளில் மட்டும் நாடு முழுவதும் 35 பேர் சாலை விபத்துகளில் மரணமடைந்திருக்கின்றனர்.
22-வது Op Selamat சோதனை நடவடிக்கையின் மூன்றாவது நாளில் அவ்வெண்ணிக்கைப் பதிவுச் செய்யப்பட்டது.
அதற்கு முந்தைய நாளன்று 18 மரணங்களே பதிவுச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில் ஹரி ராயா முதல் நாளில் மொத்தமாக 1,289 சாலை விபத்துகள் பதிவாகியதை போலீஸ் வெளியிட்டுள்ள விளக்கப்படம் காட்டுகிறது.
இதையடுத்து, வாகனமோட்டிகள் எல்லா நேரங்களிலும் கவனமாகவும் சாலை விதிமுறைகளைப் பின்பற்றியும் வாகனங்களைச் செலுத்துமாறு போலீஸ் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.
‘Rumah Selamat, Selamat Sampai Ke Destinasi என்ற கருப்பொருளில் மேற்கொள்ளப்படும் இந்த Op Selamat சோதனை நடவடிக்கை நாளையுடன் முடிவடைகிறது.