![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/07/MixCollage-02-Jul-2024-04-31-PM-7315.jpg)
கோலாலம்பூர், ஜூலை 2 – சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நேற்றிரவு முதல் மேற்கொள்ளப்பட்ட இணைய சூதாட்ட நடவடிக்கையில் இரண்டு பெண்கள் உட்பட 41 தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். மலேசிய மற்றும் சிங்கப்பூர் போலீஸ் ஒத்துழைப்பில் மேற்கொள்ளப்பட்டஅந்த நடவடிக்கையின்போது 11 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள ஆடம்பர பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இரண்டு பெண்கள் உட்பட 37 தனிப்பட்ட நபர்களை சிங்கப்பூர் போலீசார் கைது செய்தனர்.
அதே வேளையில் மலேசியாவில் குற்றவியல் துறையின் போலீஸ் குழு மேற்கொண்ட நடிவடிக்கையில் சிங்கப்பூரைச் சேர்ந்த நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையின்போது ரொக்கப் பணம், நகைகள் , விலையூர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் 4 மில்லயன் டாலர் மதிப்புடைய வங்கிக் கணக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக சிங்கப்பூர் போலிஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. மேலும் இணைய சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட கணினிகள், கை தொலைபேசிகள் மற்றும் இதர பல சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.