Latestமலேசியா

சிறுவன் ஜெய்ன் ராயன் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டுள்ளான்

சுங்கை பூலோ, டிச 8 – ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டிருந்த ஆறு வயது சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மதின் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைத்துறையின் இயக்குனர் ஷுஹைலி ஜைன் தெரிவித்திருக்கிறார்.

அந்த சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் அவன் கொலை செய்யப்படவில்லை. வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டபின் ஆற்றோரத்திற்கு அருகே அவனது சடலம் வீசப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

டமான்சரா டமாயிலுள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள ஆற்றிற்கு அருகே ஜெய்ன் ரய்யான் உடல் புதன்கிழமை இரவு 10 மணியளவில் கண்டுப் பிடிக்கப்பட்டது. அந்த சிறுவன் ஆற்றில் மூழ்கி இறக்கவில்லை. அவனது உடல் கண்டுப்பிடிக்கப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் அவன் கொலை செய்யப்பட்டுள்ளான்.

அவனது உடலில் காணப்பட்ட காயங்கள்கூட கொலையாளியிடமிருந்த போராடியபோது ஏற்பட்ட காயங்கள் என சவப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவருவதாக ஷுஹைலி கூறினார்.

அதோடு அச்சிறுவனின் கொலையில் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட நபர் அல்லது நபர்கள் அவனது உடலை வீசும் இடத்தை முன்கூட்டியே நன்கு அறிந்தவர்களாக இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். அந்த இடத்தை வழிபோக்கர்கள் பயன்படுத்துவது மிகவும் அரிதான ஒன்றாகும் என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!