Latestமலேசியா

சிலாங்கூரில், ‘இருட்டில் ஒளிரும்’ சாலைகள் ; 15 இடங்களுக்கு விரிவுப்படுத்தப்படுகிறது

ஷா ஆலாம், பிப்ரவரி 19 – சிலாங்கூரில், ஒன்பது மாவட்டங்களிலுள்ள, 15 இடங்களுக்கு, “இருட்டில் ஒளிரும்” சாலை திட்டத்தை விரிவுப்படுத்த, மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

செப்பாங், குவாலா லங்காட், சபாக் பெர்னாம், கோம்பாக் மற்றும் பெட்டாலிங் ஆகிய மாவட்டங்களில், சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தை அத்திட்டம் உள்ளடக்கி இருப்பதாக, சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் Ir இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.

குறிப்பாக, விரைவில் சாலை விளக்குகள் இல்லாத பகுதிகளில், கட்டங் கட்டமாக அத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இருட்டில் ஒளிரும் சாலைகள், வாகன ஓட்டுனர்கள் சாலையை தெளிவாக பார்க்க உதவியாக இருக்கும் என்பதோடு, அவர்களின் பாதுகாப்பையும் அது உறுதிச் செய்யும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!