![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-20-Feb-2024-02-12-PM-2633.jpg)
கோலாலம்பூர், பிப் 20 – சிலாங்கூருக்கு வருகை புரியும் 2025ஆம் ஆண்டில் 7 மில்லியன் சுற்றுப்பயணிகளை கவர்வதற்கான இலக்கை சிலாங்கூர் அரசாங்கம் கொண்டுள்ளது என ஊராட்சி மன்றம் சுற்றுலாத்துறைக்கான சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ Ng Suee Lim தெரிவித்திருக்கிறார். சுற்றுலா தொழில்துறையின் மூலம் சேவைத்துறை மாநிலத்திற்கு கூடுதல் வருவாயை பெற்றுத்தரும் துறையாக இருப்பதால் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். கடந்த ஆண்டு சிலாங்கூர் 5 மில்லியன் சுற்றுப்பயணிகளை கவரும் இலக்கை கொண்டிருந்தபோதிலும் அந்த எண்ணிக்கையை மீறி 6.54 மில்லியன் சுற்றுப்பயணிகள் சிலாங்கூருக்கு வருகை புரிந்தனர். இவ்வாண்டு 56 மில்லியன் சுற்றுப்பயணிகள் வருகை புரிவார்கள் என சிலாங்கூர் அரசாங்கம் இலக்கை கொண்டுள்ளது. அவர்களில் 4.5மில்லியன் பேர் உள்நாட்டு சுற்றுப்பயணிகளாகவும் , எஞ்சிய அனைத்துலக சுற்றுப்பயணிகள் சிலாங்கூருக்கு வருகை புரிவார்கள் என Ng Suee Lim தெரிவித்தார்.