கோலாலம்பூர், நவ 5 – சிலாங்கூரில், கம்போங் பாங்கி லாமாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இன்று காலை மணி 8.47 அளவில் 79 பேரை சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வெளியேற்றியதாக அதன் துணை இயக்குனர் அஹ்மட் முக்லீஸ் முக்தார் தெரிவித்தார்.
100க்கும் மேற்பட்டோர் சொந்தமாக வெளியேறியதாவும் அவர் கூறினார். கம்போங் பாங்கி எம்.பி.கே.கே. பொது மண்டபம், தாமான் பாங்கி ரியா, Tadika Ria பாலர் பள்ளி ஆகியவவை தற்காலிக நிவாரண மையங்களாக செயல்பட்டு வருவதாக அஹ்மட் முக்லீஸ் கூறினார்.