Latestமலேசியா

செராசில் 21-வது மாடியில் இருந்து குதித்து பெண் மரணம்

செராஸ், பிப்ரவரி – 18 சிறந்த சேவையாளர் விருதை வென்றவரான பெண் அரசு ஊழியர் ஒருவர் கோலாலம்பூர் செராசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் 21-வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார்.

சனிக்கிழமை இரவு 9 மணி வாக்கில் அச்சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஜாம் ஹாலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.

40 வயது அம்மாதுவின் உடல் ரத்த வெள்ளத்தில் அந்த அடுக்குமாடியின் கீழ் தளத்தில் கார்களை நிறுத்தும் பகுதியில் கிடந்ததைக் கண்டு பாதுகாவலர் தகவல் கொடுத்ததாகத் தெரிகிறது.

அடுக்குமாடியொன்றின் கீழ் பகுதியில் பெண்ணொருவர் இறந்து கிடக்கும் சில புகைப்படங்கள் முன்னதாக சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், போலீஸ் தற்போது அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இறந்துப் போன பெண் கோலாலம்பூரில் உள்ள அரசுத் துறையொன்றில் பணி புரிந்து வந்ததுள்ளார்.

அவரின் உடல் சவப்பரிசோதனைக்காக ச்சான்சலர் துவாங்கு முக்ரிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!