செராஸ், மார்ச் 3 – கோலாலம்பூர் செராசில் Steamroller இயந்திரம் 25 மீட்டர் அடி பள்ளத்தில் விழுந்ததில், அதன் ஓட்டுநரான இந்திய ஆடவர் உயிரிழந்தார்.
கம்போங் பாரு செராசில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
Steamroller பள்ளத்தில் விழுந்ததில் 41 வயது ஓட்டுநர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த Cheras மற்றும் Bandar Tun Razak தீயணைப்பு மீட்புக் குழுவுவைச் சேர்ந்த 10 பேர் சிறப்புக் கருவிகளைக் கொண்டு அவ்வாடவரை வெளியே கொண்டு வந்தனர்.
எனினும் அவர் உயிரிழந்து விட்டதை சுகாதாரப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியதாக கோலாலம்பூர் தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கை அறைக் கூறியது.