ஜோகூர் பாரு, பிப் 17 – சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனம் கடந்த ஆண்டு அதன் சந்தாதாரர்களுக்கு காப்புறு மற்றும் இதர இழப்பீடுகளாக 5.73 பில்லியன் ரிங்கிட் வழங்கியிருப்பதாக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்திருக்கிறார். 1973ஆம் ஆண்டு சொக்சோ உருவாக்கப்பட்டதிலிருந்து கடந்த 2023 ஆம் ஆண்டில் அதன் நிதி ஒட்டுமொத்த சிறந்த அடைவு நிலையை எட்டியதாகவும் 2022 ஆம் ஆண்டில் 5.1 பில்லியன் ரிங்கிட் இழப்பீடுகளை வழங்கியிருப்பதாக அவர் கூறினார். சொக்சோவின் நிதி வலுவாக இருந்த காரணத்தினால்தான் அதிகமான உறுப்பினர்கள் காப்புறுதி தொகை இழப்பீடு உட்பட பல்வேறு அணுகூலங்களை பெற்றதாக ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
Related Articles
இணையம் வாயிலான கார் விற்பனை மோசடியில் 41 ஆயிரம் ரிங்கிட்டை பறிகொடுத்தது போக, கொலை மிரட்டலுக்கும் ஆளான பஹாவ் ஆடவர்
12 hours ago
நாய் கடித்த ஆடவருக்கு சிகிச்சையளிப்பதில் தாமதம்? சுல்தானா அமீனா மருத்துவமனை தன்னிலை விளக்கம்
13 hours ago