![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/cdn4.premiumread-8-700x470.jpg)
சிரம்பான், ஜூன்-29 – நான்காண்டுகளுக்கு முன் தன் சொந்தத் தம்பியை படுகொலைச் செய்தத் தோட்டத் தொழிலாளிக்கு, சிரம்பான் உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
49 வயது கே.பரமசிவம், ரந்தாவில் (Rantau) உள்ள செம்பனைத் தோட்டத்தில் வைத்து கே.தஞ்சோங் துவானைக் (Tanjong Tuan) கொலைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்படிருந்தார்.
அதுவொரு நோக்கமில்லா கொலை என்றும், தனது கட்சிக்காரர் அவரின் தாயின் மரணத்திற்குப் பிறகு கவலையில் எப்போதும் மதுபோதையில் இருந்தவர் என்பதையும் கருத்தில் கொண்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படியோடு முடித்துக் கொள்ள வேண்டும் என பரமசிவத்தின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.
ஆனால், அரசுத் தரப்போ, சொந்தத் தம்பியையே கொன்று, சடலத்தை அங்கேயோ போட்டு விட்டுப் போனவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.
மரணமடைந்தவரின் உடலில் 13 இடங்களில், கூரிய ஆயுதத்தால் ஏற்பட்ட காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையும், அழுகிப் போன நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என அரசுத் தரப்பு வாதாடியது.
இதையடுத்து குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
மரண தண்டனை நிறைவேற்றத்திற்கான தேதியும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும் என்றார் அவர்.