கோலாலம்பூர், டிச 17- 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி இணையத்தின் மூலம் வாங்கப்படும் 500 ரிங்கிட்டுக்கும் குறைந்த விலை பொருட்களுக்கு 10 விழுக்காடு விற்பனை வரியை மலேசியா அமல்படுத்தவிருப்பதாக மலேசிய சுங்கத்துறை தெரிவித்திருக்கிறது.
2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அந்த 10 விழுக்காடு விற்பனை வரியை மலேசியா விதித்திருக்க வேண்டும். எனினும், இவ்வாண்டு மார்ச் முதல் சுங்கத்துறை அந்த வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.
500 ரிங்கிட்டுக்கும் குறைந்த விலையிலான பொருட்களுக்கு 10 விழுக்காடு விற்பனை வரி, 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என இவ்வாண்டு நவம்பர் 6ஆம் தேதி சுங்கத்துறையின் இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.