Latestமலேசியா

உணவகங்களில் துப்புரவு சோதனை ; 79 அபராத பதிவுகளை வெளியிட்டது DBKL

கோலாலம்பூர், பிப்ரவரி 26 – தலைநகரை சுற்று அமைந்துள்ள உணவு மற்றும் குளிர்பான விற்பனை கடை நடத்துனர்களுக்கு எதிராக 79 அபராத பதிவுகள் வெளியிடப்பட்டன.

வணிக வளாகங்களின் துப்புரவை பேண தவறியது உட்பட பல்வேறு குற்றங்களுக்காக, அவர்களுக்கு அந்த அபராத பதிவுகள் வெளியிடப்பட்டன.

லெம்பா பந்தாயிலுள்ள, கார்டன் மால், செபுதேவிலுள்ள, ஜாலான் ஜலீல் பெர்காசா, செராசிலுள்ள, ஜாலான் மனிஸ் 3,தாமான் செகார் மற்றும் ஜாலான் லெபோ அம்பாங், புக்கிட் பிந்தாங்கிலுள்ள, ஜாலான் தெங்காட் தோங் சின், செகாம்புட்டிலுள்ள, தாமான் ஸ்ரீ சினார், 1மொன் கியாரா ஆகியப் பகுதிகளில் அந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம் 93 வர்த்தக வளாகங்கள் பார்வையிடப்பட்ட வேளை ; அதில் 34 வளாகங்கள் செயல்படவில்லை.

59 வளாகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் மூன்று வளாகங்களை உடனடியாக மூட உத்தரவிடப்பட்ட வேளை ; பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 79 அபராத பதிவுகள் வெளியிடப்பட்டதாக, DBKL – கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

உணவக வளாகங்களின் உரிமையாளர்கள் அல்லது நடத்துனர்கள் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவதை உறுதிச் செய்ய சோதனை நடவடிக்கைகள் தொடரும் எனவும் DBKL கூறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!