புத்ரா ஜெயா, ஏப் 24 – 9 ஆண்டுகளுக்கு முன் கொலைக் செய்த குற்றத்திற்காக B . Ramesh என்ற ஆடவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் இன்று 30 ஆண்டு சிறைத்தண்டனை மற்று 12 பிரம்படிகளாயக திருத்தம் செய்துள்ளது. ரமேஷ் கைது செய்யப்பட்ட 2016ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி முதல் அவருக்கான 30ஆண்டுகள் சிறைத் தண்டனை அமலுக்கு வருவதாக மூவர் கொண்ட கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு தலைமையேற்ற தேசிய தலைமை நீதிபதி Tengku Maimun Tuan Mat தமது தீர்ப்பில் தெரிவித்தார். மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் Abang Hashim மற்றும் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி Hasnah Mohammed Hashim ஆகியோர் அரசு தரப்பு வழக்குறிஞர் Asmah Musa சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த இதர நீதிபதிகளாவர்.
கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி மாலை 4 மணிக்கும் மறுநாள் காலை 10 மணிக்குமிடையே Mohd Harris Saravanan Abdullaவை கொலை செய்ததில் குற்றவாளி என நிருப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு அம்டோபர் மாதம் 29ஆம் தேதி 48 வயதுடைய ரமேஷ்ஷிற்கு ஜோகூர் உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இன்னும் தலைமறைவாக இருந்துவரும் நால்வருடன் சேர்ந்து Kulaijaya, Kampung Melayu Seelong Selatan னில் ரமேஷ் இந்த கொலையை செய்ததாக கூறப்பட்டது. இதற்கு முன் ரமேஷின் மேல்முறையீட்டை கடந்த 2022 ஆம் ஆண்டு மேல் முறையீடு நீதிமன்றம் நிராகரித்து மரண தண்டனையை நிலைநிறுத்தியது.