
ஜோர்ஜ்டவுன், ஜூன்-4-பினாங்கு, ஜோர்ஜ்டவுன், ஜாலான் திரெங்கானுவில் உள்ள ஒரு காப்பி கடை, மேசைகளை “ஹலால்” மற்றும் “ஹலால் அல்லாதது” எனப் பிரித்து
பலகை வைத்தது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் அந்தப் பலகையை உடனடியாக அகற்றுமாறு
கடைக்காரருக்கு உத்தரவிட்டனர்.
பிரிவினை பலகை வாடிக்கையாளர்களை குழப்பம் அடையச் செய்யும்…
மேலும் ஹலால் வழிகாட்டுதல்களுக்கு முரணானது என
அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இத்தகைய நடவடிக்கைகள் சமூக உணர்வுகளையும் பாதிக்கக் கூடும்.
எனவே வணிகர்கள் தங்கள் சொந்த விளக்கங்களை
வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல்,
அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என பினாங்கு மாநகர மன்றம் நினைவுறுத்தியது.



