கோலாலம்பூர், மார்ச் 11 – நாட்டின் தேசிய கல்வி சட்டத்தின் கீழ், தாய்மொழிப் பள்ளிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அதனால், தாய்மொழி கல்வி முறையை அகற்றும் அல்லது முடக்கும் திட்டம் எதுவும் இல்லை என, கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் கூறியுள்ளார்.
தாய்மொழி பள்ளிகள் குறித்து, பல்வேறு கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த கருத்துகளை கல்வி அமைச்சும் கேட்டறிந்தது. எனினும், கல்வி அமைச்சின் நிலைப்பாடு, தேசிய கல்விச் சட்டத்தை வலுப்படுத்துவதே ஆகும்.
தாய்மொழிப் பள்ளிகளின் இருப்பு அல்லது செயல்பாட்டை தேசிய கல்விச் சட்டம் அங்கீகரிக்கிறது. அதனால், அவை தொடர்ந்து வழிநடத்தப்படுமென பட்லினா சொன்னார்.
முன்னதாக, நாட்டிலுள்ள தாய்மொழி கல்வி முறையை அரசாங்கம் முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டுமென, அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மல் கூறியிருந்தது தொடர்பில், பட்லினா இவ்வாறு கருத்துரைத்தார்.