உத்திர பிரேதசம், டிச 20 – காலை வேளை தேநீர் கொண்டு வர தாமதமானதால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் தலையை வாளால் வெட்டி எடுத்த கொடூரச் சம்பவம் இந்தியா உத்திர பிரேதசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான உத்தர பிரேதசம், காஜியாபாத்யில் உள்ள போஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மவீர் எனும் ஆடவனுக்கு அடிக்கடி தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளதாம்.
தேநீர் கலக்க முடியாது என்றாலோ தாமதமானலோ, கணவன் மனைவிக்கு இடையே தகராறு அடிக்கடி ஏற்பட்டு வந்தது.
இதனிடையே சம்பந்தப்பட்ட நாளன்று, காலை 6 மணிக்கு தர்மவீர் தனது மனைவி சுந்தரியிடம் இரண்டு முறை தேநீர் கேட்டுள்ளான்.
தேநீர் 10 நிமிடம் கழித்துதான் கிடைக்கும் என்று மனைவி பதிலளிக்க அவர்களிடையே வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த தர்மவீர் வாளை எடுத்து சுந்தரியின் தலையை துண்டித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.
இச்சம்பவம் அவர்களின் மகன் கண்முன்னே நிகழ்ந்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து மூத்த மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் தர்மவீரை தேடி வருகின்றனர்.