Latestமலேசியா

நியூசிலாந்தில் சாலை விபத்து: மலேசிய மாணவர்கள் இருவர் மரணம், மூவர் காயம்

கோலாலம்பூர், மார்ச் 31 – நியூசிலாந்தில் சாலை விபத்தில் சிக்கிய 5 மலேசிய மாணவர்களில் இருவர் மரணமுற்றனர்.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு அவ்விபத்து ஏற்பட்டதாக வெளியுறவு அமைச்சு கூறியது.

இருவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்ட வேளை, மற்ற மூவரும் உடனடி சிகிச்சைக்காக South Wales-ல் உள்ள Christchurch மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களின் நலன் காப்பு மற்றும் நிர்வகிப்பு சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்ய அவர்களின் குடும்பங்களுக்கு Christchurch வாழ் மலேசியர்கள் வாயிலாக Wellington-னில் உள்ள மலேசிய உயர் ஆணையம் உரிய தூதரக உதவிகளை வழங்கி வருவதாக Wisma Putra கூறியது.

Canterbury பல்கலைக்கழக மாணவர்களான Megat Ashman Aqif Megat Irman Jefni, Wan Nur Adlina Alisa ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர்.

காயமடைந்தவர்கள் Nur Firas Wafiyyah, Muhamad Faris Mohd Fairusham மற்றும் Lya Issable Anak Walton என தெரிவிக்கப்பட்டது.

இறந்த மாணவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வருவதற்கு வெளியுறவு அமைச்சும், அங்குள்ள மலேசிய உயர் ஆணையமும் வாரிசுத்தாரர்களுக்கு உரிய உதவிகளை வழங்கும் என்றும் Wisma Putra கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!