சென்னை, டிச 29 – மறைந்த தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று மதியம் 1 மணிவரை சென்னை தீவுத் திடலில் வைக்கப்படவுள்ளது. அதன்பிறகு அவரது இறுதி ஊர்வலம் தொடங்கும் . தீவுத் திடலில் இருந்து விஜயகாந்த் உடல் மீண்டும் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்திற்கு கொண்டுச் செல்லப்படும். அங்கு மாலை மணி 4.45க்கு அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் . தமிழக அரசின் முழு அரசாங்க மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும். இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , இன்று மதியம் விஜயகாந்ந் நல்லுடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 படங்களுக்கும் மேல் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் விஜயகாந்த் நேற்று காலை இறந்தார்.
Related Articles
இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் கண்காணிக்க சிறப்பு செயற்குழுவா? அவசியமில்லை ! – டத்தோ ரமணன்
18 hours ago
பவள விழாவைக் கொண்டாடும் Bank Rakyat வீரியம் குறையாமல் சேவையைத் தொடர வேண்டும் – டத்தோ ரமணன் வலியுறுத்து
18 hours ago