கோலாலம்பூர், மார்ச் 7 – பெண் ஒருவர் ஏடி.ஏம் இயந்திரத்தில் பணம் பட்டுவாடா செய்யும் மூடும் நள்ளிரவு நேரத்தில் சென்றபோது எதிர்பாரா விதமாக அதனுள்ளே மாட்டிக்கொண்ட காணொளி ஒன்று வைரலாகி அனைவரின் கவனத்தைப் பெற்றுள்ளது.
பெண் ஒருவர் நண்பர்கள் வெளியில் காத்திருக்கும் போது ஏ.டி.ஏம் இயந்திரத்திலிருந்து பணத்தை விரைவாக எடுக்க முனைவது, நேரம் ஆக ஆக கதவு மேலிருந்து மூடிக்கொண்டே கீழே இறங்குவதும் அக்காணொளியில் காணமுடிகின்றது.
இறுதியாக பணத்தை இயந்திரத்திலிருந்து வெளியே எடுத்தவுடன், இயந்திரம் இருந்த இடத்திலிருந்து வெளிவர முயலும் போது, கதவு முழுவதுமான மூடிக்கொண்டது.
38 வினாடி காணொளியில் அந்த பெண் வங்கியில் சிக்கிய பதட்டமான நிலையை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
நண்பர்கள் அவரை மீட்பதற்கான வழியைத் தீவிரமாகத் தேடுவதையும் வங்கியின் அலாரம் அடிப்பதையும் அந்த காணொளியில் தெரிகிறது.
இறுதியில், அந்த பெண் துணை காவல் அதிகாரிகளின் உதவியுடன் வங்கியிலிருந்து பாதுகாப்பாக வெளியேறி தனது வீட்டை அடைந்துள்ளார்.
இக்காணொளியைப் பார்த்த வலைத்தளவாசிகள், அப்பெண்ணின் பாதுகாப்பை கருதி, வங்கி மூடும் இறுதிக் கட்டத்தில் இம்மாதிரி பணம் எடுக்கச் செல்வதை தவிர்க்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.