Latestமலேசியா

பத்துகேவ்ஸ் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகராசா @ தியாகராஜன் காலமானார்

கோலாலம்பூர், பிப் 4- சிலாங்கூரின் சுங்கை துவா மற்றும் பத்துகேவ்ஸ் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜெகராசா என்ற டத்தோ வி. தியாகராஜன் காலமானார். 82 வயதான ஜெகராசா 1999 ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினராகவும் பின்னர் 2004 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை சுங்கை துவாவுக்கு பதில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பத்துகேவ்ஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துவந்தார். 2004ஆண்டு நடைபெற்ற 11 ஆவது பொதுத் தேர்தலில் பத்துகேவ்ஸ் சட்டமன்ற தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். அதன்பின்னர் பத்துகேவ்ஸ் தொகுதியில் தேசிய முன்னணி வெற்றி பெறவில்லை .

2008 ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இண்ட்ராப் அலை மற்றும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் சுனாமியால் பத்துகேவ்ஸ் தொகுதி உட்பட சிலாங்கூர் மாநிலத்தின் பல தொகுதிகளை பி.கே.ஆர் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி கைப்பற்றியது. 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பத்துகேவ்ஸ் தொகுதயில் போட்டியிட்ட பி.கே.ஆர் கட்சியின் அமிருடின் ஷாரியிடம் பத்துகேவ்ஸ் தொகுதியை தேசிய முன்னணி இழந்தது. இதனிடையே ஜெகராசாவின் இறுதிச் சடங்கு எண் 16, ஜாலான் செத்தியா இண்டா யு13/ 11 ஜே , தாமான் செத்தியா இந்தா 11, 40170 , ஷா ஆலம் என்ற முவரியிலுள்ள இல்லத்தில் இன்று பிப்ரவரி 5ஆம் தேதி நண்பகல் ஒரு மணியிலிருந்து மாலை 3 மணி வரை நடைபெறும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!