பத்து பஹாட், பிப் 22 – தொழிற்சாலை ஊழியர் ஒருவர் தனது Toyata Supra காரில் சாகசத்தில் ஈடுபட்டபோது பத்து பஹாட், Jalan Desa Botani, Taman Botani-யில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் நேற்று மோதியதால் அக்கார் பெரும் சேதத்திற்கு உள்ளானது. அந்த சம்பவம் வீடியோவில் பதிவானதைத் தொடர்ந்து அந்த காணாளி உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் நேற்று மதியம் 1.15 மணியளவில் அந்த நபரை கைது செய்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent Shahrulanuar Mushaddat தெரிவித்தார்.
அந்த சந்தேக நபர் முகநூலில் பதிவேற்றம் செய்த காணொளி வைரலானதை அடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டதோடு அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. 1987ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டம் 42 உட்பிரிவு (1) ஆவது விதியின் கீழ் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தாக வாகனம் ஓட்டியதற்காக அந்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.