கோலாலம்பூர், பிப் 29 – பள்ளிக்குத் திரும்பும் உதவித் திட்டத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அண்மையில் தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற பள்ளிக்கு திரும்பும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவர் தமது முகநூல் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் செயலாளரான கமில் முனிம் அவரின் சார்பாக தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு உதவிகளை வழங்கியதாக அவர் சுட்டுக்காட்டினார்.
இந்த திட்டத்தின் வழி, 1500 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டுக்கான புதிய பள்ளி தவணைக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த உதவி பள்ளி பொருட்களை வாங்குவதற்கும் தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும் என்றார்.
மேலும், ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காகவும் இதுபோன்ற உதவிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று பிரதமர் கூறினார்.