![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-23-at-8.56.35-AM-780x470.jpeg)
பெட்டாலிங் ஜெயா, பிப் 23- பயனற்றுப் போகும் நீர் மேலாண்மை (NRW) பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு வருடாந்திர நிதியாக 1,000 கோடி ரிங்கிட்டை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்று தேசிய நீர் சேவை ஆணையம் ( SPAN ) பரிந்துரைத்துள்ளது. பயன் தராமல் போகும் நீர் பிரச்சினையால் நாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 800 கோடி ரிங்கிட்டை இழந்துள்ள வேளையில் அந்தத் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று SPAN தலைவர் சார்லஸ் சன்டியாகோ தெரிவித்திருக்கிறார்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படாவிட்டால் அடுத்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட 2,000 கோடி ரிங்கிட்டை இழக்க நேரிடும். பயனற்றுப் போகும் நீரின் அளவைக் குறைப்பதற்கு ஏதுவாக மாநிலங்களில் பழுதடைந்த குழாய்களை மாற்றுவதற்கு உதவும் வகையில் ஆண்டுக்கு 1,000 கோடி ரிங்கிட் நிதியை அரசாங்கம் வழங்கும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார். Jaya One வர்த்தக மையத்தில் பிஜே லைவ் ஆர்ட்ஸில் நடைபெற்ற உலக வெப்ப மயம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போது சார்லஸ் சன்டியாகோ இத்தவலை வெளியிட்டார்.